நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஒரு வருட காலமாக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவின் இதன் பாதிப்பு தற்போது சற்றே குறைந்து வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டறியப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கொடுத்துள்ளது.
எனவே, கடந்த மாதம் 16ம் தேதி முதல் இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடப்பட்டு ஒரு மாதங்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை நாடு முழுவதும் 1,01,88,007 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக தடுப்பூசி போட்டுக் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…