Categories: இந்தியா

#Monkeypox: குரங்கு அம்மை நோய் – வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு!

Published by
பாலா கலியமூர்த்தி

குரங்கு நோய் மேலாண்மைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்.

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் (Monkeypox) வேகமாக பரவி வருகிறது. இந்த குரங்கு அம்மை தைவான் மற்றும் கொலம்பியாவில் முதன் முறையாக கண்டறியப்பட்டது. அதன்படி, உலகளவில் கேமரூன், மத்திய ஆப்ரிக்கா, கோட் டி ஐவரி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, காபோன், லைபீரியா, நைஜீரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 57 நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை நோய் 8,200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குரங்கு அம்மை நோய் இந்தியாவில் நுழையாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டால் வரும் நிலையில், இந்தியாவின் முதல் குரங்கு நோய் பாதிப்பு கேரளாவில் உள்ள கொல்லத்தில் உறுதி செய்யப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பு நடவடிக்கைகளில் உதவ பல மருத்துவ குழுவை அங்கு அனுப்பியுள்ளது.

ஏற்கனவே, பீகாரைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கேரளாவைச் சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை ஒன்றாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் குரங்கு நோய் மேலாண்மைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பயணிகள் தவிர்க்க வேண்டியவை:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சர்வதேச பயணிகள் நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும். தோல் புண்கள் அல்லது பிறப்புறுப்பு புண்கள் உட்பட நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும். எலிகள், அணில்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட சிறிய பாலூட்டிகள் போன்ற இறந்த அல்லது உயிருள்ள காட்டு விலங்குகளுடன்  தொடர்பு கொள்ள வேண்டாம்.

காட்டு விளையாட்டிலிருந்து (புஷ்மீட்) இறைச்சியை உண்ணுதல் அல்லது தயாரித்தல் அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து காட்டு விலங்குகளிலிருந்து பெறப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துதல் (கிரீம்கள், லோஷன்கள், பொடிகள்) உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்கள் பயன்படுத்தும் அசுத்தமான பொருட்களுடன் (உடை, படுக்கை அல்லது சுகாதார அமைப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவை) அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்ளுதல் கூடாது.

சொறி மற்றும் காய்ச்சல் போன்ற குரங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தோன்றினால் அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். நீங்கள் வசிக்கும் பகுதியில் குரங்கு அம்மை பாதிப்பு இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் உடனடியாக சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குரங்கு அம்மை நோய் உலக அளவில் ஆபத்தான தொற்று என்று அறிவிப்பது தொடர்பான வல்லுநர் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று WHO கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago