கேரள நபருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி !

Default Image

ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இருந்து திரும்பிய வந்த கேரள நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பதாக மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளர்.

அவரின் இரத்தத்தை பரிசோதிப்பதற்காக இரத்த மாதிரிகள் புனேவில் உள்ள வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.இந்த நபர் வெளிநாட்டில் ஒரு நோயாளியுடன் தொடர்பில் இருந்ததாக ஜார்ஜ் கூறுகிறார்.

பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நோய் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.இந்த பரிசோதனை முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்