ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் மஜி தேர்வு.!

Mohan Charan Majhi

ஒடிசா : புவனேஸ்வரில் நடைபெற்ற இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒடிஷாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிந்தது. இதில், 25 ஆண்டுகால ஆட்சி செய்த நவீன் பட்நாயக்கின் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்தி பாஜக அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் ஒடிஷா முதல்வராக மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனெவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒடிசாவின் துணை முதல்வராக கே.வி.சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். நடந்து முடிந்த (2024) சட்டமன்றத் தேர்தலில், ஒடிசாவில் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மை பெற்றது. இந்நிலையில், 25 ஆண்கள் கழித்து ஒடிசாவில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்