மோடியின் கண்ணீர் மூன்றாம் அலையில் மக்களை காக்காது – ராகுல் காந்தி

Published by
லீனா

இந்தியாவில் எல்லாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை விரைவில் தாக்கும் என்றும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா அலை மிகவும் மோசமாக காணப்பட்டது. மத்திய அரசு இந்த இரண்டு அலைகளையும் சரியாக கட்டுப்படுத்தவில்லை. இதில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மோசமாக காணப்பட்டது.எனவே, முதல் இரண்டு அறைகளில் நாம் எங்கெல்லாம் தவறு செய்தோமோ, அதையெல்லாம் சரி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் அவர் கூறுகையில் மத்திய அரசை குற்றம் சாட்டுடுவதற்காக வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. மூன்றாம் அலையை கட்டுப்படுத்த வெள்ளையறிக்கை உதவியாக இருக்கும் என்றும், மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கும் என்பது மொத்த நாட்டுக்கே தெரியும் என தெரிவித்துள்ளார்.

மூன்றாம் அலை தோன்றிய பின்னும் இந்தியாவில்,புதிய அலை தோன்றலாம். நேற்று அதிகமானோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். நேற்று தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்றுள்ளது. மாநிலங்களுக்கிடையே எந்தவித வேறுபாடும் காட்டாமல், அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி மத்திய அரசு வழங்க வேண்டும்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் எல்லாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுள்ளது. மோடியின் கண்ணீர் மூன்றாவது அலையில் மக்களை காக்காது. ஆனால் ஆக்சிஜன் இப்போதே தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது என தெரிரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago