Narendra Modi [file image]
மோடி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 293 இடங்கள் கைப்பற்றி வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இதன் மூலம் 3-வது முறையாக பிரதமராக நேற்று இரவு பதிவியேற்றார் மோடி.
தற்போது, விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன் பெறும் திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதற்கான கோப்பில் தான் பிரதமர் இன்று முதல் கையெழுத்திட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி இன்று பதவியேற்றுக் கொண்ட அவர், பதவியேற்றவுடன் தனது முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 17-வது தவணையை விடுவிப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.
இது பற்றி பேசிய மோடி, ” விவசாயிகளுக்காக நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம், எங்களது அரசு வருங்காலங்களில் முழு அர்ப்பணிப்புடன் விவசாயிகளுக்காகவும், விவசாயத் துறைக்காகவும், விவசாயிகளின் வாழ்வுக்காகபவும் அதிகம் உழைக்கவிருக்கிறோம்”, என்று தெரிவித்துள்ளார்.
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…