மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி நாசிக் பகுதியில் பாஜக சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, ‘ ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டத்தை நீக்கியது பாஜகவின் குறிக்கோள் அல்ல. அது மக்களின் விருப்பம். அங்குள்ள மக்களும் மற்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி சிலர் அதிகப்ரசங்கி தனமாக பேசி வருகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அப்படி வழக்கு வழக்கு நடக்கையில் நம் நாட்டு நீதித்துறையை நம்ப வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘ பாஜக அரசு எப்படி காஷ்மீரில் 370 பிரிவினை அதிரடியாக நீக்கியதோ, அதேபோல அதிரடியாக அயோத்தியில் ராமர்கோவிலை கட்டவேண்டும். நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க கூடாது. ‘ என சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசியிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் பிரதமர் மோடி பேசியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…