அயோத்தியில் ராமர் கோவில்! சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

Default Image

மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி நாசிக் பகுதியில் பாஜக சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ‘ ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டத்தை நீக்கியது பாஜகவின் குறிக்கோள் அல்ல. அது மக்களின் விருப்பம். அங்குள்ள மக்களும் மற்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி சிலர் அதிகப்ரசங்கி தனமாக பேசி வருகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அப்படி வழக்கு வழக்கு நடக்கையில் நம் நாட்டு நீதித்துறையை நம்ப வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு முன்னர் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘ பாஜக அரசு எப்படி காஷ்மீரில் 370 பிரிவினை அதிரடியாக நீக்கியதோ, அதேபோல அதிரடியாக அயோத்தியில் ராமர்கோவிலை கட்டவேண்டும். நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க கூடாது. ‘ என சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசியிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் பிரதமர் மோடி பேசியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்