Categories: இந்தியா

G20India2023: பைடனில் மாஸ் என்ட்ரி! உலக தலைவர்களை கைகுலுக்கி, சிவப்பு கம்பளத்தில் வரவேற்ற மோடி!

Published by
கெளதம்

உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாளில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் 2 கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது. அதன்படி மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

G20 நாடுகளின் கூட்டமைப்பில், 21ஆவது நாடாக ஆப்ரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகள் டெல்லியில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் நடந்து முடிந்தன. ஆப்ரிக்க ஒன்றியத்தை G20-ல் இணைப்பதற்கு இந்தியா முன்மொழிந்ததை, ஏற்று பிற நாடுகளும் ஆதரவு தெரிவித்தது. மேலும், இந்த மாநாட்டில் ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவர் அசோமனியும் பங்கேற்றுள்ளார்.

இந்த மாநாடு தொடங்கவதற்கு முன்னதாகவே, இன்று காலை பிரதமர் மோடி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பாரத் மண்டபத்திற்கு வருகை தரும் உலகக் தலைவர்களை கைகுலுக்கி, சிவப்பு கம்பலத்தில் நின்று வரவேற்றார். மேலும், அவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த மாட்டிற்கு ஒவ்வொரு நாடு தலைவர்களும் ஒவ்வொரு ஸ்டைலில் வருகை தந்தனர். அதில் குறிப்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கெத்தாக கூலிங் கிளாஸ் உடன் என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த வகையில், அவரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி (PTI_News) நிறுவனம்….

Published by
கெளதம்

Recent Posts

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

10 mins ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

1 hour ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

2 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

3 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago