பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் ஆசி பெற்றார் மோடி.!

Default Image

டெல்லி : பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் தலைவர்கள் & எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடியை தேர்வு செய்ய வேண்டுமென அமித்ஷா முன்மொழிந்தார், இதனை ராஜ்நாத் சிங், நட்டா வழிமொழிந்தனர். இதனைத் தொடர்ந்து 293 எம்.பி.-க்களும் ஒரு மனதாக மோடியை மீண்டும் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

3ஆவது முறையாக அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், கூட்டம் நிறைவடைந்த உடன், பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரின் இல்லங்களுக்கும் சென்று அவர் வாழ்த்து பெற்றார். கடந்த முறை பிரதமராக தேர்வான போதும் இருவரையும் சந்தித்து மோடி வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்