பிரம்மாண்ட வரலாற்று ரயில் பாலம்-இன்று திறக்கிறார் பிரதமர்

Default Image
வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பீஹாரில்  பிரதமர் நரேந்திர மோடி இன்று  திறந்து வைக்க உள்ளார்.

பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003ம் – 2004ம் ஆண்டில் மத்திய அரசானது ஒப்புதல் அளித்தது. ரூ.516 கோடி  மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப் பட்டிருந்த இப்பாலத்தின் கட்டுமான பணிகள்  ஆனது கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் இந்த பாலமானது திறக்கப்படுவது பீஹார் வரலாற்றில் சிறப்புமிக்க ஒரு தருணமாகும். இதன்மூலம் 86 ஆண்டு கனவானது நிறைவேற உள்ளது. பிராந்திய மக்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்க உள்ள நிலையில் இந்த திட்டத்துடன் மேலும் 12 ரயில் திட்டங்களையும் பிரதமர் அறிமுகம் செய்துவைக்க உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்