2 நாள் அரசு பயணமாக இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று 2வது நாளாக காலை குடியரசு மாளிகைக்கு சென்ற டிரம்புக்கு முப்படை மரியாதை செலுத்தி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர். பின்னர் ராஜ்பாத்தில் உள்ள காந்தி நினைவிடத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுடன் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அங்கிருந்து ஐதராபாத் இல்லத்துக்கு சென்று ட்ரம்ப் மற்றும் மோடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 3 ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் குடியுரிமை சட்டம் குறித்து ட்ரம்பிடம் கேள்வி ஒன்றை எழுப்பினர்.
அதற்கு ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் குடியுரிமை சட்டம் குறித்து பேசவில்லை, ஆனால் மத சுதந்திரத்தை குறித்து பேசினேன் என்று தெரிவித்தார். இந்தியாவில் மத சுதந்திரம் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி என்னிடம் கூறினார். பின்னர் மத சுதந்திரத்திற்கு பிரதமர் மோடி ஆதரவாக இருக்கிறார் என்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடம் பேசியதிலிருந்து மத சுதந்திரம் குறித்து எதிர்மறை கருத்து ஏதும் வரவில்லை என அமெரிக்க அதிபர் தெரிவித்தார். மேலும் டெல்லியில் நடக்கும் வன்முறை பற்றி கேள்விப்பட்டேன். ஆனால் அதைக்குறித்து பிரதமரிடம் நான் கேட்கவில்லை எனவும் டெல்லியில் ஏற்பட்ட பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என குறிப்பிட்டார். இதையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு குடியரசு மாளிகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முடித்தவுடன் திரும்ப அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…