2 நாள் அரசு பயணமாக இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று 2வது நாளாக காலை குடியரசு மாளிகைக்கு சென்ற டிரம்புக்கு முப்படை மரியாதை செலுத்தி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர். பின்னர் ராஜ்பாத்தில் உள்ள காந்தி நினைவிடத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுடன் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அங்கிருந்து ஐதராபாத் இல்லத்துக்கு சென்று ட்ரம்ப் மற்றும் மோடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 3 ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் குடியுரிமை சட்டம் குறித்து ட்ரம்பிடம் கேள்வி ஒன்றை எழுப்பினர்.
அதற்கு ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் குடியுரிமை சட்டம் குறித்து பேசவில்லை, ஆனால் மத சுதந்திரத்தை குறித்து பேசினேன் என்று தெரிவித்தார். இந்தியாவில் மத சுதந்திரம் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி என்னிடம் கூறினார். பின்னர் மத சுதந்திரத்திற்கு பிரதமர் மோடி ஆதரவாக இருக்கிறார் என்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடம் பேசியதிலிருந்து மத சுதந்திரம் குறித்து எதிர்மறை கருத்து ஏதும் வரவில்லை என அமெரிக்க அதிபர் தெரிவித்தார். மேலும் டெல்லியில் நடக்கும் வன்முறை பற்றி கேள்விப்பட்டேன். ஆனால் அதைக்குறித்து பிரதமரிடம் நான் கேட்கவில்லை எனவும் டெல்லியில் ஏற்பட்ட பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என குறிப்பிட்டார். இதையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு குடியரசு மாளிகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முடித்தவுடன் திரும்ப அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…