கொவைட-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, பாரத பிரதமர் மோடியின், ‘டுவிட்டர்’ கணக்கில், ஏராளமானோர் பகிர்ந்த கருத்துகளுக்கு, தற்போது அவர் பதில் அளித்துள்ளார். இத்தாலியில் இருந்து பத்திரமாக தன் மகளை அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்த ஒருவருக்கு ‘இந்திய மக்களுக்கு எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு உதவி செய்வோம்’ என, பதில் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மருத்துவர், தன் படத்தை வெளியிட்டு, ‘யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்’ என, கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வை பாராட்டிய பிரதமர் மோடி, ‘நம் பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பாடுபடும் இதுபோன்ற மனிதர்களின் அர்ப்பணிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை’ என,கூறியுள்ளார். மேலும் அவர், ‘அனைத்து ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள்,மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் ஒன்றிணைந்து, இந்த பூமியை மிகச் சிறந்ததாக மாற்றும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…