டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8-ம் தேதியும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கவுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹூசைன் ட்விட்டரில் பிரதமர் மோடி, டெல்லி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், அவர் பதிவிட்டுருந்தது, இந்திய மக்கள் பிரதமர் மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், கடும் நெருக்கடியால் டெல்லி தேர்தலிலும் பிரதமர் மோடியின் கட்சி தோல்வியை சந்திக்கவேண்டும் என்றும், மோடியின் அற்பத்தனமான பேச்சும், மிரட்டல் போக்கும் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும் காஷ்மீர் விவகாரம், குடியுரிமைத் திருத்தச்சட்டம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் மோடி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆதரவை இழந்துவிட்டார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹூசைனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் நரேந்திர மோடி எங்கள் நாட்டின் பிரதமர், எனக்கும் அவர்தான் பிரதமர். டெல்லி தேர்தல் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை, அதில் தீவிரவாதத்துக்கு ஊற்றுக்கண்ணாகத் திகழும் பாகிஸ்தான் அதில் தலையிடுவதை நாங்கள் பொறுத்திருக்கமாட்டோம். எப்படிப்பட்ட முயற்சிகளைப் பாகிஸ்தான் செய்தாலும், அவர்களால் இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…