இந்திய நிலத்தைப் பார்த்த சீன ராணுவத்திற்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
லடாக் எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மோடி, நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தின் மீது கூட யாரும் கண் வைக்க முடியாத வகையில் நமது பலம் உள்ளது.
இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை. நாட்டை பாதுகாப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது என கூறினார். மேலும் அவர் கூறுகையில் இந்திய நிலத்தைப் பார்க்கத் துணிந்தவர்களுக்கு இந்த வீரர்கள் சரியான பாடம் கற்பித்ததாக கூறினார். சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய எல்லைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை என்று கூறினார்
ஒரே சமயத்தில் பல முனைக்களுக்கு செல்லக் கூடிய திறன் நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உள்ளது.முப்படைக்கு தேவையான போர் விமானங்கள், நவீன ஹெலிகாப்டர்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.நாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் இந்திய ஆயுதப்படைகள் செய்து வருவதாக பிரதமர் கட்சித் தலைவர்களுக்கு உறுதியளித்தார். .
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…