கொரோனா வைரஸ் பிரச்சினையை மோடி அரசு தவறாக கையாண்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், நேற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கொரோனா வைரஸ் பிரச்சினையை மோடி அரசு தவறாக கையாண்டுள்ளது என்றும், மோடி அரசின் மாபெரும் தோல்விகளில் ஒன்றாக இது பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், துரதிருஷ்டம் என்பது தனியாக வருவதில்லை. பொருளாதார பின்னடைவு, கொரோனா பிரச்சினை, சீனாவுடனான எல்லை விவகாரம் என்று சேர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் மோடி அரசின் மோசமான நிர்வாகமும், தவறான கொள்கைகளுமே காரணம் என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கொரோனா பிரச்சினையில், சுகாதார கட்டமைப்பு குறைபாடு அம்பலம் ஆகியுள்ளது. மத்திய அரசு சொல்லும் ‘உச்சம்‘ எப்போது வரும் என்றே தெரியவில்லை. இப்போது, மாநில அரசுகளிடம் மத்திய அரசு பொறுப்பை மாற்றி விட்டுவிட்டது. ஆனால், கூடுதல் நிதிஉதவி வழங்கவில்லை. மக்கள், தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளுமாறு விட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…