வரி வசூலில் தான் மோடி அரசு இயங்குகிறது…! பெட்ரோல் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி ட்வீட்…!

Default Image

உங்கள் கார் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கினாலும், மோடி அரசு வரி வசூலில் இயங்குகிறது என ராகுல் காந்தி ட்வீட். 

சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் தான் உள்ளது. கச்சா எண்ணெயின் விலை உயர்வை பொருத்து, பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது.

சமீப நாட்களாக பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 கடந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல்  தலைவர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசை கண்டித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘உங்கள் கார் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கினாலும், மோடி அரசு வரி வசூலில் இயங்குகிறது’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்