“மோடி மீண்டும் மீண்டும் வெற்றி பெற முடியாது” ராகுல் காந்தி சாடல்..!!

Published by
Dinasuvadu desk

புதுதில்லி,  உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் ஒற்றைக் கொள்கை திணிக்கப்பட்டு வருவதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். ஒற்றை எண்ணத்தின் அடிப்படையில் நாடு இயங்க முடியாது என்றும் அவர் கூறினார். தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வித்துறை நிபுணர்கள் மாநாட்டில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: நாங்கள் தேசத்தை ஒருங்கிணைக்கப் போகிறோம்’ என்று ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசி வருகிறார். தேசத்தை ஒருங்கிணைக்க அவர் யார்? தேசம் தன்னைத்தானே ஒருங்கிணைத்துக் கொள்ளும்.

Image result for மோடிஇன்னும் அடுத்த சில மாதங்களில் அவர்களது பிம்பம் உடைந்துபோகும். அவர்களுக்கான தேர்தல் களம் என்னவென்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்துவிட்டனர். அதில் அவர்கள் ஒரு முறை வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், மீண்டும், மீண்டும் வெற்றி பெற முடியாது. அதை தெளிவாக உணர்ந்த காரணத்தினால் தான், தேர்தல் என்பது வரும், போகும் என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்திய அரசமைப்புகளை கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

கல்வி நிலையங்கள், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் ஏற்கெனவே அவர்களால் கைப்பற்றப்பட்டு விட்டன. கருத்துரிமை இல்லை: நாட்டில் ஒற்றைக் கொள்கை திணிக்கப்பட்டு வருவதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். உங்கள் மீது ஓர் கொள்கை திணிக்கப்பட்டு வருவதை நீங்கள் உணர முடியும். இந்த உணர்வும், வலியும் உங்களுடைய இதயத்தில் மட்டுமல்லாமல், விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவரது இதயங்களிலும் ஏற்பட்டுள்ளது. நாடு ஒற்றை எண்ணத்தின் அடிப்படையில் இயங்க முடியாது. பல கருத்துக்கள் குறித்து விவாதிக்க பொது மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அதுதான் நமது நாட்டின் பலமே தவிர, அதுவே பலவீனம் அல்ல. நாட்டின் 3,000 ஆண்டு வரலாற்றை திரும்பி பார்த்தோம் என்றால், நாமே வெற்றி பெறவுள்ளவர்கள் என்பதும், தோல்வி அடைய வேண்டியவர்கள் அல்ல என்பதும் புரியும் என்றார் ராகுல் காந்தி.

DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

59 mins ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago