இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவாக்ஸின், கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. தற்போது அமெரிக்காவின் நிறுவனமான மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த விண்ணப்பித்தது.
மேலும், மும்பையில் இருக்கும் சிப்லா நிறுவனமும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கு (டிசிஜிஐ) விண்ணப்பம் ஒன்று விடுத்தது. அதில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து சிப்லா நிறுவனம் விற்பனை செய்ய அனுமதி கேட்டுள்ளது. அதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த மருந்திற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் ஆரம்ப கட்ட பரிசோதனைகள் இல்லாமல் மருந்தை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி விண்ணப்பித்தது.
சிப்லா நிறுவனம் முதலில் 100 பேருக்கு மருந்தை செலுத்தி அவர்களை கண்காணித்து மருந்து குறித்த அறிக்கையை டிசிஜிஐக்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளது. இதனடிப்படையில் தற்போது அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியான ஸ்பைக்வாக்ஸ் என்ற தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சிப்லா நிறுவனம் இதை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…