தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் !உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்த எம்எல்ஏ

Default Image

கர்நாடகாவில் நாளுக்கு நாள் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது.அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை 17 எம்எல்ஏக்கள் திரும்பப்பெற்றனர். இதனால் கடந்த  சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு தோல்வி அடைந்தது.

ஆனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக பெரும்பான்மையை நிரூபித்தது.இதன் பின்னர் ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.பின் எடியூரப்பா முதலமைச்சராக 4-வது முறையாக பொறுப்பேற்றார்.

ராஜினாமா செய்த 14 எம்எல்ஏக்களை கர்நாடக சபாநாயகர்  ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்.ஏற்கெனவே 3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக ஆனது.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.தகுதி நீக்கம் செய்த எம்எல்ஏக்களில் ஒருவரான எச்.விஸ்வநாத் கூறுகையில்,கர்நாடக சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்தது ஜனநாக விரோதமானது.மேலும்  சபாநாயகரின் தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாவும் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்