கர்நாடகா சபாநாயகர் மீது காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

Default Image

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை ஏற்க சபாநாயகருக்கு  உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து ஆட்சி  கவிழும் நிலைமை உருவாகியுள்ளது.இந்நிலையில், இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற சபாநாயகரிடம் கொடுக்க முன்வந்தனர். அவர்களுள்  5 பேரின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டும் என்று கோரி டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்