மிசோரம் மாநிலம், ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, சில தளர்வுகளை அறிவித்தது. இந்த தளர்வுகளுடனான ஊரடங்கை நவம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
மேலும், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் உள்ள “ஐசவ்ல்” மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகாரிக்க தொடங்கிய நிலையில், இன்று முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை தவிர்ப்பதற்காகவும், அவர்களை கண்காணித்து சோதனை செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், விமான உள்ளிட்ட போக்குவரத்துக்கு சேவைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…