மிஸ் இந்தியா இறுதிப்போட்டியாளர்…சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி.!

Default Image

சிவில் சர்வீசஸ் தேர்வு 2019-ம் ஆண்டுக்கான முடிவுகளை ஆகஸ்ட் 4 -ஆம் தேதி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இணையதளத்தில் பலரின் வெற்றிக் கதைகளால் நிரம்பி வழிகிறது. இருப்பினும், ஒரு நபர் நெட்டிசனின் கண்களில் மாட்டிக்கொண்டார். அதுவும் ஒரு சிறந்த காரணத்திற்காக.

ராஜஸ்தானை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன், சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசை 93 இடத்தை பிடித்துள்ளார். இது உண்மையிலேயே சுவாரஸ்யமான விசயம் என்று தான் சொல்ல வேண்டும். காரணம், ஐஸ்வர்யாவும் பாராட்டப்பட்ட மாடல் மற்றும் கடந்த 2016 -ஆம் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளராக இருந்தார். இதை மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு  பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

மேலும், ஐஸ்வர்யா 2015 – ம் அண்டு நடைபெற்ற டெல்லி பிரஷ் ஃபேஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார். உண்மையில், ஐஸ்வர்யாவின் கனவு சிவில் சேவைகளுக்கு வருவது தான். இந்த செய்தி வைரலாகி வந்த பிறகு, சிவில் சர்வீஸ் அதிகாரிகள் உட்பட பல நெட்டிசின்களும் சமூக வலைத்தளத்தில் ஐஸ்வர்யாவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்