Categories: இந்தியா

அதிகரிக்கும் பிளாக்மெயில், டிஜிட்டல் கைது.! எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்.!

Published by
மணிகண்டன்

சென்னை : டிஜிட்டல் வாயிலாக பிளாக்மெயில் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதுள்ள இணையதள உலகில் மோசடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசு அதிகாரிகள் என மிரட்டி ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயல், ஆன்லைன் மூலம் சிறைவைக்கும் செயல் என குற்ற செயல்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இப்படியான மோசடி கும்பல் திடீரென ஒரு நபருக்கு வெளிநாட்டு நம்பரில் இருந்து போன் செய்வார்கள், சம்பந்தப்பட்ட நபரிடம் , தாங்கள் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சிபிஐ என சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூறிக்கொள்வார்கள். பின்னர், உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் வந்துள்ளது என கூறி மிரட்டுவார்கள். பின்னர் உங்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என கூறி ஸ்கைப் போன்ற இணையதள இணைப்பை அனுப்பி ஒருநாள் முழுக்க வீட்டிலேயே டிஜிட்டல் கைது செய்வார்கள். பின்னர் அவர்களை பிளாக் மெயில் செய்து டிஜிட்டல் வாயிலாக அந்த மோசடி கும்பல் பணம் பறிப்பார்கள்.

இதுகுறித்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், ஓர் எச்சரிக்கை செய்தியை விடுத்துள்ளது.  அதாவது போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCP), CBI, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய மாநில அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் என கூறிக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்து, ‘பிளாக்மெயில்’ மற்றும் ‘டிஜிட்டல் கைது’ ஆகியவற்றில் ஈடுபடும் சைபர் குற்றங்கள் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இணையதளம் வாயிலாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு பெயரை கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிப்பது மற்றும் டிஜிட்டல் கைது செய்தல் தொடர்பான புகார்கள் காவல்துறைக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது எனவும் இதனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

5 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

5 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

7 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

8 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

8 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

9 hours ago