உ.பி-யில் பாஜக-வில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்த பாஜக எம்.எல்.ஏ..!

Default Image

உ.பி-யில் வரும் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2 பாஜக எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகல்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ந்தேதியில் இருந்து ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ சுவாமி பிரசாத் மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். மவுரியாவை தொடர்ந்து ரோஷன் லால் வர்மாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகியுள்ளது உத்திரபிரதேச அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்