கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் இயங்கி வருகிறது. இந்த விமானம் நேற்று இரவு வழக்கம் போல கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது .அப்போது இந்த விமானத்தில் கோவா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் உட்பட 180 பேர் பயணம் செய்தனர்.
விமானம் கோவாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இடதுபக்க இன்ஜின் தீப்பிடித்தது. இதை பார்த்த பயணிகள் அலறினர். பின்னர் விமானி தீப்பிடித்து எஞ்சினை அணைத்து விட்டு மற்றொரு இன்ஜின் மூலமாக மீண்டும் கோவாவிற்கு விமானத்தை திருப்பினார்.வ
கோவாவில் விமானம் பத்திரமாக தரை இறங்கியது.இதனால் பயணிகள் எந்தவித சேதமும் இல்லாமல் தப்பித்தனர். இதுபற்றி இதுபற்றி அமைச்சர் நிலேஷ் கூறுகையில் , இடது பக்கம் இன்ஜின் தீப்பிடித்ததை பார்த்துபயணிகள் பதறினர். ஆனால் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
நாங்கள் வேறு ஒரு விமானம் மூலமாக டெல்லி செல்ல உள்ளோம் என கூறினார். இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…