Categories: இந்தியா

வக்பு சட்டத்திருத்தம்., நாங்கள் எங்கும் ஓடவில்லை.. மத்திய அமைச்சர் பேச்சு.!

Published by
மணிகண்டன்

டெல்லி : 1995இல் திருத்தம் செய்யப்பட்டு இருந்த வக்பு வாரிய சட்டத்திருத்தமானது, தற்போது மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு வக்பு வாரிய திருத்த சட்டம் 2024 என மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டதிருத்தத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார்.

இந்த திருத்த சட்டத்தமானது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாதங்களை மக்களவையில் முன்வைத்தனர். இந்த மசோதா மூலம், முஸ்லிம் அல்லாதவர்களும் வக்பு வாரிய குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இது மத சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என காங்கிரஸ் குற்றசாட்டை முன்வைத்தது.

முஸ்லிம் அல்லாதவர்களை வக்பு உறுப்பினர்களாக நியமிப்பது போல இந்து கோயில் நிர்வாகத்தில் மற்ற மதத்தினரை அனுமதிக்க முடியுமா என்று திமுகவும் விமர்சனம் செய்தது. இதே போல மற்ற எதிர்க்கட்சியினர்களும் தங்கள் எதிர்ப்புகளை மக்களவையில் பதிவு செய்தனர்.

எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தது பின்னர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் வக்பு சட்டத்திருத்தம் 2024 பற்றி விளக்கம் அளித்தார். அதில், இந்த மசோதா ஐக்கிய வக்பு சட்ட மேலாண்மை என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் அதிகாரமளித்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை வக்பு வாரியத்தில் உறுப்பினராக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வக்பு வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இப்போது, ​​எம்.பி., இந்துவாகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருந்தால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.? நாடாளுமன்ற உறுப்பினர்களை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்துவது சரியல்ல. ஒரு எம்.பி., எம்.பி., என்ற தகுதியால் வக்பு வாரியத்தில் சேர்க்கப்பட வேண்டுமென்றால் அந்த எம்.பி., மதம் மாற வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த சட்டதிருத்தத்தை தாக்கல் செய்துவிட்டு நாங்கள் எங்கும் ஓடிப்போகவில்லை. இந்த சட்ட திருத்தத்தை எந்தக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றாலும் அனுப்பி வைக்க நாங்கள் தயார். நான் மத்திய அரசின் சார்பில் பேச விரும்புகிறேன். இந்த சட்டத்திருத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த மசோதாவுக்கு பரிந்துரைக்கப்பட்டு விரிவான விவாதம் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்தம் குறித்து விளக்கம் அளித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

13 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

14 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago