கொரோனா தொற்றினால இன்று இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங், விவசாயிகளின் நலனுக்காக அயராது உழைத்தவர் என்று கூறி மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும்,ராஷ்ட்ரீய லோக் கட்சி தலைவருமான அஜித் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால்,குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் சிங் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனளிக்காததால் இன்று அஜித் சிங் உயிரிழந்தார்.
இதனை,ராஷ்ட்ரீிய லோக்தளக் கட்சியின் மூத்த தலைவரும்,அஜித் சிங் மகனுமான ஜெயந்த் சவுத்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து,அஜித் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கதத்தில் கூறியதாவது,”ராஷ்ட்ரீய லோக் கட்சியின் தலைவர் சவுத்ரி அஜித் சிங் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அஜித் சிங் விவசாயிகளின் நலனுக்காக அயராது உழைத்தவர். மேலும்,மத்திய அமைச்சராக பணியாற்றி பல்வேறு துறைகளை திறமையுடன் வழிநடத்தியவர்”,என்று கூறியுள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…
தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கிய பிறகு அவர் நடிக்கும் படங்களும், இயக்குனராக இயக்கிய படங்களும்…