சுரங்க விபத்து – துளையிடும் எந்திரத்தின் பிளேடுகள் சேதம்..!

Uttarakhand Uttarkashi Silkyara mine accident

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி  தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்  போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 11 நாட்களாக நடைபெற்று வருகிறது. 8 குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக 9 குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சுரங்க விபத்து – இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மீட்பு பணிகள்..! தயார் நிலையில் மருத்துவக்குழு..!

இன்னும் சற்று நேரத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர் மீட்கப்படவுள்ளனர்.எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

இதற்கிடையில் 9 குழாய் பதிக்கும் போது  இடையில் கம்பி இருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், துளையிடும் பிளேடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 7 பிளேடுகள் கையிருப்பில் உள்ளதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது. இதனால் மீட்புப்பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்