இந்தியா

வங்கக்கடலில் உருவானது “மிதிலி” புயல்! நாளை கரையை கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்பின், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று நாளை வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா கடற்கரை பகுதியில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச தேர்தல் : மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா காங்கிரஸ்.? தக்கவைக்குமா பாஜக.?

இந்த புயல் ஒடிசாவில் இருந்து 190 கி.மீ தொலைவில் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.  வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி (MIDHILI) எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  மிதிலி புயல் 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்கதேசத்தின் மோங்லா மற்றும் கேபுபரா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று  வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு வங்கக்கடலில் ஏற்கனவே 2 புயல்கள் உருவான நிலையில் மூன்றாவதாக மிதிலி புயல் உருவாகியுள்ளது. கடந்த 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…

9 minutes ago

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

2 hours ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

2 hours ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

4 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

4 hours ago