ஹைதராபாத்தில் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவை .!

Default Image

ஹைதராபாத்தில் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது

ஹைதராபாத் மாநிலத்தில் செப்டம்பர் -7 ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது. அன்லாக் -4 வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கபட்டுள்ளதால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த வகையில், அனைத்து இந்திய பெருநகரங்களின் நிர்வாக இயக்குநர்கள் நேற்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். அதில் தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நெறிமுறைகளை கூறினர்.இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன்,  ஹைதராபாத் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்