உலோக கட்டமைப்பு விழுந்து விபத்து..! 2 பேர் பலி, 2பேர் காயம்..!

Default Image

மஹாராஷ்டிராவில் கனரக உலோகக் கட்டமைப்பு விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிராவில் உள்ள பால்கார் மாவட்டத்தில் கனரக உலோக கட்டமைப்பு கீழே விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர். பால்கார் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் கூரையில் கட்டுமான பணி நடந்து கொண்டு இருந்தது. அங்கு கனரக உலோக கட்டமைப்பை கிரேன் உதவியுடன் கட்டிடத்தின் மீது ஏற்றுக் கொண்டிருந்த பொழுது கீழே விழுந்துள்ளது.

இந்தக் கட்டமைப்பு கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் இறந்துள்ளனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்