மேகேதாட்டு அணை விவகாரம் : முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு…!!

Default Image
    

மேகேதாட்டு அணை பிரச்சனைக்கு தீர்வு காண, முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், மேகேதாட்டு அணை பிரச்சனையை சுமூகமாக தீர்க்க பேச்சுவார்த்தைக்கு வரும்படி கூறியுள்ளார்.
இரு மாநில முதல்வர்களும் உகந்த நேரத்தை குறிப்பிட்டால், அதே நாளில் டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மேகேதாட்டு விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று தமிழக அரசு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்