மோடியுடன் சந்திப்பு.! சிஏஏ பற்றி பயப்படத் தேவையில்லை- உத்தவ் தாக்கரே.!

Published by
Dinasuvadu desk
  • மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
  • சந்திப்பிற்கு பிறகு பேசி உத்தவ் தாக்கரே குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் கூறினார்.

தற்போது நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக பல இடங்களில் பேரணி நடந்து வருகிறது.  சமீபத்தில் மோடி “எவ்வளவு நெருக்கடி வந்தாலும் குடியுரிமை சட்டத் திருத்தம் செயல்படுத்தப்படும்” என கூறினார்

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசி உத்தவ் தாக்கரே “தேசிய குடிமக்கள் பதிவு மூலம் மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவை இருக்காது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் கூறினார்.

கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா  கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலுக்குப் பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனா பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்டு பின்னர் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுக்கொண்டார்.

பாஜகவுடன் சிவசேனா கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு  மோடியை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசி இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

‘ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி?’ சென்னை அணிக்கு வந்த சோதனை..!

‘ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி?’ சென்னை அணிக்கு வந்த சோதனை..!

சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…

1 hour ago

“மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை”- தோல்விக்குப் பிறகு தோனி ஓபன் டாக்.!

சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…

2 hours ago

“திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தும்” – பிரதமர் மோடி பதிவு.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…

2 hours ago

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

11 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

11 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

12 hours ago