தற்போது நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக பல இடங்களில் பேரணி நடந்து வருகிறது. சமீபத்தில் மோடி “எவ்வளவு நெருக்கடி வந்தாலும் குடியுரிமை சட்டத் திருத்தம் செயல்படுத்தப்படும்” என கூறினார்
இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசி உத்தவ் தாக்கரே “தேசிய குடிமக்கள் பதிவு மூலம் மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவை இருக்காது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் கூறினார்.
கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலுக்குப் பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனா பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்டு பின்னர் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுக்கொண்டார்.
பாஜகவுடன் சிவசேனா கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு மோடியை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசி இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…