டைப்பிங்கில் பல கின்னஸ் சாதனையை படைத்த டெல்லியை சேர்ந்த கம்பியூட்டர் ஊழியர்.
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் ஊழியராக பணிபுரிபவர் வினோத் குமார் சவுத்ரி. இவருடைய வயது 41. இவர் கம்பியூட்டரில் அதிவேகமாக தட்டச்சு செய்து 8 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். மேலும் விளையாட்டில் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
9 சாதனையை அசால்ட்டாக முடித்த வினோத்குமார் சவுத்ரி இது குறித்து தெரிவித்துள்ளதாவது, எனக்கு விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், உடல்நிலை பாதிப்பால் அதில் சாதிக்க முடியவில்லை. அதன் காரணத்தால் டைப்பிங்கில் வேகமாக தட்டச்சு செய்து பல சாதனைகளை புரிந்துள்ளார். கடந்த 2014 இல் மூக்கில் வேகமாக தட்டச்சு செய்து சாதனை படைத்தார். பின்னர் கண்களை மூடிக்கொண்டு தட்டச்சு செய்துள்ளார். அடுத்து 2017 ஆம் ஆண்டு வாயில் குச்சி வைத்து தட்டச்சு செய்துள்ளார்.
இதனை அடுத்து அவரது கின்னஸ் சாதனையை அவரே முறியடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், இவர் விளையாட்டில் டென்னிஸ் பந்தை ஒரு நிமிடத்தில் கைகளால் 205 முறை தொட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் இவருக்கு சச்சின் போல் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை சச்சின் 19 உலக சாதனை புரிந்துள்ளார். இதனை முறியடிப்பது தான் இவருடைய இலக்கு என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…