டைப்பிங்கில் பல கின்னஸ் சாதனையை படைத்த டெல்லியை சேர்ந்த கம்பியூட்டர் ஊழியர்.
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் ஊழியராக பணிபுரிபவர் வினோத் குமார் சவுத்ரி. இவருடைய வயது 41. இவர் கம்பியூட்டரில் அதிவேகமாக தட்டச்சு செய்து 8 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். மேலும் விளையாட்டில் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
9 சாதனையை அசால்ட்டாக முடித்த வினோத்குமார் சவுத்ரி இது குறித்து தெரிவித்துள்ளதாவது, எனக்கு விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், உடல்நிலை பாதிப்பால் அதில் சாதிக்க முடியவில்லை. அதன் காரணத்தால் டைப்பிங்கில் வேகமாக தட்டச்சு செய்து பல சாதனைகளை புரிந்துள்ளார். கடந்த 2014 இல் மூக்கில் வேகமாக தட்டச்சு செய்து சாதனை படைத்தார். பின்னர் கண்களை மூடிக்கொண்டு தட்டச்சு செய்துள்ளார். அடுத்து 2017 ஆம் ஆண்டு வாயில் குச்சி வைத்து தட்டச்சு செய்துள்ளார்.
இதனை அடுத்து அவரது கின்னஸ் சாதனையை அவரே முறியடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், இவர் விளையாட்டில் டென்னிஸ் பந்தை ஒரு நிமிடத்தில் கைகளால் 205 முறை தொட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் இவருக்கு சச்சின் போல் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை சச்சின் 19 உலக சாதனை புரிந்துள்ளார். இதனை முறியடிப்பது தான் இவருடைய இலக்கு என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள தேவாரா படம் வசூல் ரீதியாகப் பட்டையைக்…
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…