பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவ மாணவர் சுட்டு கொலை …!

Published by
Rebekal

டெல்லி குர்கானில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவ மாணவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

டெல்லி குர்கான் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த வினித் குமார் என்பவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு ஆயுர்வேத மருத்தும் மற்றும் அறுவை சிகிச்சை பயின்று  வந்த வினித் குமாரை கொலை செய்த குற்றவாளி லக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதே பல்கலைக்கழகத்தின் சட்ட கல்லூரி மாணவரான லக்கி, வினித்குமாரை கொலை செய்துவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பித்து சென்று விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து குருகிராம் மேற்கு காவல் ஆணையர் தீபக் அவர்கள் கூறுகையில், முதல்கட்ட விசாரணையில் இது காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறு என்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள லக்கி என்பவரும் அவரது நண்பர்களும் ஏற்கனவே வினோத் குமாருடன் வாக்குவாதப்பட்டதாகவும், அதன் பின்பு தான் இந்த கொலை அரங்கேறி உள்ளதாகவும் கூறியுள்ளார். தற்பொழுது இந்த கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றவாளியையும் தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

2 hours ago

“தென்தமிழகத்தை நோக்கி மிதமான மழை பெய்யக்கூடும்” – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

2 hours ago

நேருக்கு நேராக சிங்கத்தை பார்த்த பிரதமர் மோடி! சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு!

குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…

3 hours ago

“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…

3 hours ago

ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…

4 hours ago

12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…

5 hours ago