Categories: இந்தியா

அமையுமா மூன்றாவது அணி…சந்திரசேகர் ராவ் சந்திப்பதை இரத்து செய்த மாயாவதி….!!

Published by
Dinasuvadu desk
பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்கும் சந்திரசேகர் ராவை சந்திப்பதை மாயாவதி நிறுத்தியுள்ள்ளதாக கூறப்படுகின்றது
அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள. குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநில  கட்சிகளுடன் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைத்து , பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தெலுங்கானாவில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வரான சந்திரசேகர் ராவ் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் இல்லாத மூன்றாவது அணி என்று  புதிய கூட்டணியை உருவாக்க முயற்சியை மேற்கொண்டு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பாட்நாயக் , மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
அதோடு இல்லாமல் டெல்லி சென்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்தித்து கூட்டணி மற்றும் மூன்றாவது அணி குறித்து தெலுங்கானா முதல்வர்  சந்திரசேகர் ராவ்  சந்தித்து பேசுவதாக இருந்தது.ஆனால் இந்த டெல்லியில் சந்திப்பு நடைபெறவில்லை.இதை தொடர்ந்து வருகிற 6–ந் தேதி ஐதராபாத் சென்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்-வை  சந்திக்க உள்ளதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். அதே போல பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.ஆனால் தற்போது மாயாவதி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ரா-வுக்கு நேரம் ஒதுக்காமல்  சந்திப்பதை ஒத்திவைத்தார் என்று கூறப்படுகின்றது. இதனால் காங்கிரஸ் மற்றும் பிஜேபி-க்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாகுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது..
Published by
Dinasuvadu desk

Recent Posts

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.! 

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 seconds ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

34 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

46 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago