வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே வங்கியில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் தவணையை தாமதமாக கட்டலாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது,உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்த மத்திய அரசு ,2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்தது.இதனால் வங்கிகளின் தவணைக் கட்டத் தவறியவர்களுக்கும் சிறுதொழில் புரிபவர்களுக்கும் பலன் கிடைக்கும் என்று அரசுத் தரப்பில் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…