மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில்..!! ரெயில் தடம்புரண்டது..!!!

Default Image

மத்திய பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் நேற்று காட்னி-சோபன் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ‘ரெயில் தடம்புரண்டதில் 8 பயணிகள் காயமடைந்தனர். மேலும் இதன் எண்ணிக்கை உயரக்கூடும். பயணிகளில் பெரும்பாலும் தொழிலாளர்களாக இருந்தனர்’ என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் சல்க்னா-பாரியாகலாவிற்கு இடையே நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கான உறுதியான காரணம் வெளியிடப்படவில்லை. மீட்பு பணிகள் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்