கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே துப்பாக்கியுடன் மாவோயிஸ்ட் தகராறில் ஈடுபட்டது பெரும் பீதியை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் கோடஞ்சேரி மாவோயிஸ்ட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்குள்ள சீரகப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்.
நேற்று முன்தினம் அதிகாலை ஜோஸின் மகன் ராபின் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே ஒரு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்தார். இதைப்பார்த்து பயந்துபோன ராபின் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த ஜோஸ் வீட்டு நாயை அவிழ்த்து விட்டார்.
இதையடுத்து நாய் பாய்ந்து சென்று மர்ம நபரை விரட்டியது. ஆனால் அந்த நபர் பயப்படாமல் ஜோஸ் வீட்டிற்குள் புகுந்தார். அவர் ‘நாயை கட்டி போடு அல்லது அப்பா, மகன் 2 பேரையும் கொலை செய்து விடுவேன்’ என மிரட்டினார்.
இதையடுத்து ஜோஸ் நாயை கட்டிப்போட்டார். இந்த நேரத்தில் அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதையடுத்து அந்த நபர் உடனடியாக அங்கிருந்து காட்டுக்குள் சென்று விட்டார்.
அவருடன் மேலும் 3 பேர் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் 4 பேரும் மாவோயிஸ்டுகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கோடஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…