துப்பாக்கியுடன் வலம்வந்த மாவோயிஸ்ட்கள் ..!

Default Image

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே துப்பாக்கியுடன் மாவோயிஸ்ட் தகராறில் ஈடுபட்டது பெரும் பீதியை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் கோடஞ்சேரி மாவோயிஸ்ட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்குள்ள சீரகப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்.

நேற்று முன்தினம் அதிகாலை ஜோஸின் மகன் ராபின் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே ஒரு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்தார். இதைப்பார்த்து பயந்துபோன ராபின் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த ஜோஸ் வீட்டு நாயை அவிழ்த்து விட்டார்.

இதையடுத்து நாய் பாய்ந்து சென்று மர்ம நபரை விரட்டியது. ஆனால் அந்த நபர் பயப்படாமல் ஜோஸ் வீட்டிற்குள் புகுந்தார். அவர் ‘நாயை கட்டி போடு அல்லது அப்பா, மகன் 2 பேரையும் கொலை செய்து விடுவேன்’ என மிரட்டினார்.

இதையடுத்து ஜோஸ் நாயை கட்டிப்போட்டார். இந்த நேரத்தில் அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதையடுத்து அந்த நபர் உடனடியாக அங்கிருந்து காட்டுக்குள் சென்று விட்டார்.

அவருடன் மேலும் 3 பேர் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் 4 பேரும் மாவோயிஸ்டுகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கோடஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்