மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவல்…தமிழக கேரள எல்லையும் பலத்த கண்காணிப்பு…!!

Default Image

தமிழ்நாடு கேரள மலையோர எல்லைகளில் மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவியதாக தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் கேரள மாநிலங்களிடையே ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில்  துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்ட்டுக்கள் நடமாடி வருவதாக தமிழக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள மலை காட்டு பகுதிகளில் நக்சல் தடுப்பு ரகசிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளா அட்டபாடி காட்டு பகுதியை ஒட்டியுள்ள  மேட்டுப்பாளையம் மலைப்பகுதிகளில் ஆயுதம் தாங்கி  போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரள எல்லைகளின் சோதனை சாவடிகளில்கடும் சோதனைக்குட்பட்டே வாகனங்கள்   அனுமதிக்கப்பட்டுகின்றன.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்