ராகுல் காந்தியை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக இருக்கிறார்கள். தற்போது ராகுல் காந்திதான் முன்வர வேண்டும்.
இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அவர்கள் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் இவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுல் காந்தி நாளுக்கு நாள் முதிர்ச்சி பெற்று வருகிறார். அவரை இனி சிறு குழந்தை என்று சொல்ல முடியாது. தலித் மக்களின் வீடுகளுக்கு செல்கிறார். அங்கு உணவுகளை உண்ணுகிறார். மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கலப்பு திருமணம் செய்துகொள்ள வேண்டும். சாதிகள் ஒழிய கலப்பு திருமணம் அவசியம் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். காந்தியின் கருத்தை ராகுல் காந்தி பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ராகுல் காந்தியை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக இருக்கிறார்கள். தற்போது ராகுல் காந்திதான் முன்வர வேண்டும் என்றும், ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வண்ணமாக, ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்யலாம். இது இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…