ராகுல் காந்தியை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக உள்ளனர்…! – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

Default Image

ராகுல் காந்தியை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக இருக்கிறார்கள். தற்போது ராகுல் காந்திதான் முன்வர வேண்டும்.

இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அவர்கள் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் இவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுல் காந்தி நாளுக்கு நாள் முதிர்ச்சி பெற்று வருகிறார். அவரை இனி சிறு குழந்தை என்று சொல்ல முடியாது. தலித் மக்களின் வீடுகளுக்கு செல்கிறார். அங்கு உணவுகளை உண்ணுகிறார். மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  ராகுல் காந்தி கலப்பு திருமணம் செய்துகொள்ள வேண்டும். சாதிகள் ஒழிய கலப்பு திருமணம் அவசியம் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். காந்தியின் கருத்தை ராகுல் காந்தி பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ராகுல் காந்தியை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக இருக்கிறார்கள். தற்போது ராகுல் காந்திதான் முன்வர வேண்டும் என்றும்,  ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வண்ணமாக, ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்யலாம். இது இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்