கொரோனாவில் இருந்து மீண்ட பெண்ணுக்கு இரவு 8 மணி நேரம் பயணம் செய்து வீட்டில் சேர்த்த பெண் ஆட்டோ ஓட்டுநர்.
கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி வருகிறது.இதனால் பாதிப்பும்,உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உலக சுகாதார அமைப்பும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தியது .பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தான் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பெண் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனால் அந்த பெண் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.இந்த சூழ்நிலையில்தான் பெண் ஆட்டோ ஓட்டுநரான லைய்பீ ஓய்ணம் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்துள்ளார். இரவு முழுவதும் சுமார் 8 மணி நேரம் ஆட்டோ ஒட்டி மறுநாள் காலை மலைப்பகுதியில் உள்ள அந்த பெண்ணை வீட்டில் சேர்த்துள்ளார்.இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை அறிந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பெண் ஓட்டுநரை நேரில் அழைத்து பாராட்டியது மட்டும் அல்லாமல் ,அவருக்கு ரூ.1,10,000 ஊக்கத்தொகையை வழங்கி சிறப்பித்துள்ளார்.மேலும் இந்த மணிப்பூரில் தொழில்முனைவோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழங்கிய தொகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…