Manipur cji condemn [File Image]
மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மணிப்பூர் வன்முறை தொடர்பான விசாரணை, வீடியோ விவகாரம், இழப்பீடு, மறு குடியமர்வு போன்றவற்றை ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் 3 ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
அதன்படி, நீதிபதி கீதா மிட்டல் தலைமையில், நீதிபதிகள் ஷாலினி ஜோஷி, ஆஷா மேனன் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்ட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து 3 நீதிபதிகள் கொண்ட குழு கையாளும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
வன்முறை வழக்குகளை விசாரிக்க 42 சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தை சேர்ந்த டி.ஐ.ஜி. நிலை அதிகாரிகள் சிறப்பு விசாரணையை கண்காணிப்பார்கள் எனவும் அறிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் கூறுகையில், மணிப்பூர் பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ குழுவில் வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
சிபிஐ விசாரணையை ஐபிஎஸ் அதிகாரி கண்காணிக்க வேண்டும். மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளன, சிபிஐக்கு மாற்றப்படாத வழக்குகளை 42 எஸ்ஐடிகள் விசாரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மணிப்பூர் டிஜிபி இன்று நேரில் ஆஜரானார். ஏற்கனவே, மணிப்பூர் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த உச்சநீதிமன்றம் டிஜிபியை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…