காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார்.
மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி!
வரும் ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து இந்த ஒற்றுமை யாத்திரையை தொடங்க ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வரும் மோதல் போக்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், குறிப்பிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதிக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இது குறித்து மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைமை கூறுகையில், மணிப்பூரில் யாத்திரை ஆரம்பிப்பதற்கு இதுவரை மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும் அளவில் மக்கள் கூடுவதற்கும் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மணிப்பூரின் வேறு பகுதியிலோ அல்லது எந்த பகுதியில் அனுமதி தரப்படுகிறதோ அந்த பகுதியில் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…