Categories: இந்தியா

இந்தியாவின் எளிமையான முதல்வர்’ மாணிக் சர்க்கார் விடை பெறுகிறார்?

Published by
Venu

25 ஆண்டுகளுக்கு பிறகு  திரிபுராவில் இடதுசாரி கூட்டணி அரசு பதவியில் இருந்து இறங்குகிறது. அங்கு 20 ஆண்டுகாலம் முதல்வர் பதவி வகித்த எளிமையான முதல்வர் மாணிக் சர்க்கார் விடை பெறுகிறார்.

நாடுமுழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரிபுரா மாநில சட்டப்பேரவை முடிவுகள் வெளியாகி வருகின்றன. அம்மாநிலத்தி்ல் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் வேட்பாளர் மறைவால் ஒரிடத்தில் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

பிற்பகல் நிலவரப்படி பாஜக 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 16 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் அம்மாநிலத்தில் 1993ம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு பதவி விலகுகிறது. 20 ஆண்டுகாலம் முதல்வராக பதவி வகித்து வரும் மாணிக் சர்கார், அங்கு நீண்டகாலம் முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Image result for manik sarkar in home

திரிபுரா மாநிலம் கிருஷ்ணபூரில் 1949ல் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் மாணிக் சர்க்கார். இவரது தந்தை அமுல்யா சர்க்கார் தையல்காரர். தாய் அஞ்சலி சர்க்கார் அரசு பணியாளர். தொடக்க காலம் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக பணியாற்றிய மாணிக் சர்க்கார் 1998ம் ஆண்டு அம்மாநில முதல்வராக பதவியேற்றார். 20 ஆண்டுகாலம் தொடர்ந்து முதல்வராக இருந்த அவர் மிகவும் எளிமையானவர்.

திரிபுரா மாநிலத்தின் எந்த பகுதி மக்களும் அவரை தொடர்பு கொள்ள முடியும். நேர்மையான நிர்வாகம் மற்றும் கடைக்கோடி மக்களுக்கும் அரசு பணிகள் சென்றடைவதை உறுதி செய்தார். நாட்டிலேயே மிக குறைவான சொத்துக்கொண்ட ஏழை முதல்வர் ஆவார். சொந்த வீடு, நிலம் இல்லாத முதல்வராக இருந்து வந்தார். இந்தியாவில் தற்போதுள்ள முதல்வர்களின் சொத்துக்கள் குறித்த விவரம் வெளியானபோது, மிகவும் குறைவான சொத்து கொண்ட எளிமையான முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

திரிபுரா தேர்தலில் இடதுசாரி கூட்டணி தோல்வி முகத்தில் இருப்பதால் அவர் பதவி விலகும் சூழல் தற்போது உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago