கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 சிம் கார்டுகளை ஷாரிக் மாற்றியுள்ளார். இந்த குக்கர் குண்டு ஆனது, மைசூரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த பயணி ஒருவர் என இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இதன் பின்னர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ஆட்டோ ஓட்டிவந்தவர் முகமது ஷாரிக். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியை சேர்ந்தவர். இவர் கோவை, சிங்காநல்லூர் பகுதியில் சில மாதங்கள் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளார்.
அப்போது தான் தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் உடன் நட்பாகி, அவரது பெயரிலேயே சிம் கார்டு வாங்கியுள்ளார். இதன் காரணமாகவே, சுரேந்திரனை ரகசிய இடத்தில் வைத்து தமிழக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுவரை கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 சிம் கார்டுகளை ஷாரிக் மாற்றியுள்ளார். இந்த குக்கர் குண்டு ஆனது, மைசூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒன்றரை மாதங்கள் தங்கி இருந்து குக்கர் குண்டை தயாரித்துள்ளார் ஷாரிக்.
மைசூரில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு தயாரிக்க உபயோகப்படுத்திய பொருட்கள், சிம் கார்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மைசூரில் இருந்து அரசு பேருந்து மூலம் குக்கர் குண்டு கொண்டுவரப்பட்டு, பின்னர் ஆட்டோ மூலம் மங்களூரு வரும்போது இந்த வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்பு சட்டம் மற்றும் கூட்டு சதி போன்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஏற்கனவே இது பயங்கரவாத தொடர்புள்ள சம்பவம் என குறிப்பிட்ட கர்நாடக காவல்துறை, மேலும், இந்த ஷாருக்கிற்கும், கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த முபினுக்கும் தொடர்பு இருந்ததா? மேலும், தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருந்ததா என்கிற பல்வேறு கோணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…