பொதுமுடக்கம் முடிந்தபின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் தேர்வுகள் நடைபெறுமா இல்லை ரத்து செய்யப்படுமா என்று மாணவர்களில் மத்தியில் குழப்பம் நிலவி வந்தன. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்து, நிலைமை சரியான பின்னர் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதனிடையே 10, 12 ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியா தெரிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்று சிபிஎஸ்இ தரப்பில் விளக்கமளித்துள்ளது. மேலும், தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் பொதுமுடக்கம் முடிந்த பின்னர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…